புத்தளம், முதளைப்பாளி, அல் – மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா, இன்று  வெள்ளிக்கிழமை (23) முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் Z.A.தௌபீக் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.T.M.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் மௌலவி பஸால் சலபி, கவிக்குரல் மன்சூர், கவிஞர் முனவ்பர்கான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *