Month: March 2019

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன்செயற்பட்டால்  நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில்இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்துசெயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்தஇல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர்  (01) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம்ஆண்டில் குதித்த போது ,  மூடியிருந்த கதவை நாங்கள்திறந்து விட்டதானாலேயே அவருக்கு ஆதரவு பெருகி,  வெற்றிபெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா?  மஹிந்தவா? என்று பெரிய பிரளயம் கிளம்பியிருந்த போது நாம் என்னமுடிவை எடுக்கப்போகின்றோம் என எல்லோரும் அப்போதுஎதிர்பார்த்திருந்தனர். “நாம் போக மாட்டோம்” என அடித்துகூறியவர்களுக்கு நாம் எடுத்த தீர்க்கமான முடிவு மரணஅடியாக மாறியது. அதே போன்று ஜனாதிபதி மைத்திரி அண்மையில்மேற்கொண்ட  ஜனநாயக விரோத செயற்பாடுகளின் போதும்,  நாம் அவருக்கு ஆதரவளிப்போமென பலர் எண்ணினர் .எனினும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாம் எடுத்தமுடிவு அவரது முயற்சிகளை பாழாக்கியது. ஜனாதிபதி தேர்தலின் போது “நாம் வந்ததனாலேயே அவர்வெற்றி பெற்றார்”. இப்போது “நாம்  வராததனாலேயே அவரதுமுயற்சிகள் தோல்வியுற்றன”. இதனை முன்னாள் ஜனாதிபதிமஹிந்தவுக்கும் உணர்த்தி இருக்கின்றோம். கோடிகளுக்கும்பதவிகளுக்கும் விலை பேசப்பட்ட போதும் நாம் எதற்கும்அசைந்து கொடுக்க வில்லை . தற்போதைய அரசியல் சூழல் இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்?அடுத்த பிரதமர் யார் ?  எவரது கையில் இனி வரும் ஆட்சி?என்று தீர்மானிக்கும் காலம் நெருங்கி வருகின்றது. கடந்த காலங்களில் வன்னியில் உதித்த எமது கட்சியானது ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாகஇருந்தது. அதே போன்று இனி வரும் காலங்களிலும் இந்தகட்சியின் பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே. வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்த காலங்களைபோன்று  சவால்களை முறியடித்து , ஆட்சியில்  தவிர்க்கமுடியாத, முக்கிய ஒரு கட்சியாக பரிணமித்தது போல, இனிவரும் காலங்களிலும் அதனை விளங்க செய்ய முடியும். அதன்மூலம் நாம் சொல்வதை செய்ய கூடிய நாட்டுத்தலைமையைஉருவாக்க முடியும். எல்லா இனத்தையும் மதத்தையும் சமமாகமதித்து போஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும்  உருவாக்கலாம். எமது செயற்பாடுகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்க கூடாது.தூர இலக்குடன் செயற்பட வேண்டும்.இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும்ஐக்கியத்தை சிதைத்து எங்களை பிரித்து வேறாக்கநினைப்பவர்களுக்கு நமது ஒற்றுமையின் மூலம் சிறந்தபதில்களை வழங்குவோம் . இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.

“ஒரே நாளில் 200  பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :-  அமைச்சர் ரிஷாட்!

கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய…

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த  திட்டங்கள் ! அமைச்சர் ரிஷாட் வவுனியாவில் தெரிவிப்பு..

கிட்டத்தட்ட  10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு  சதவீத  பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும்…