அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில், இன்று (07) வயம்ப கூட்டுறவு கிராமிய வங்கிக் கட்டடத்தில் உள்ள ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமிய, வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *